மொத்த நேரடி வரி வசூல் 3.6 சதவீதம் வளர்ச்சிமொத்த நேரடி வரி வசூல் 3.6 சதவீதம் வளர்ச்சி ... தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு ...
கச்சா எண்ணெய் செலவினத்தால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
01:03

புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து வருவதற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிப்பும் முக்கிய காரணம் என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.

ஏற்றுமதி நாடுகள் : வியன்னாவில், சர்வதேச எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சரிவு நிலைக்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிப்பும், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011-12ம் ஆண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, முந்தைய ஆண்டை விட, 40 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரம் கோடி டாலராக
அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பின் சரிவு நிலையும், இறக்குமதி செலவினத்தை உயர்த்தி விடுகிறது. கச்சா எண்ணெயின் விலை, 10 டாலர் அதிகரிக்கும் நிலையில், அது, வளர்ச்சிகண்டு வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், 1.5 சதவீத சரிவு நிலைக்கு வழி வகுத்து விடுகிறது.

பொருளாதார வளர்ச்சி : கடந்த இரண்டு ஆண்டுகள் வரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின், 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா, நான்காவது மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டுகளுக்கு இடையில், கச்சா எண்ணெய் விலை, சராசரியாக, ஒரு பீப்பாய்க்கு, 27 டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், இந்தியாவின் இறக்குமதி செலவினம், 10 ஆயிரம் கோடி டாலரிலிருந்து, 14 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயரும் போது, உள்நாட்டில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. அது, நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்க செய்து விடுகிறது.

வர்த்தக பற்றாக்குறை : இதனால், மூலப்பொருட்கள் விலை உயர்வதுடன், பட்ஜெட் பற்றாக்குறையையும் உயர்த்தி விடுகிறது. ஒட்டுமொத்த அளவில், பொருளாதார வளர்ச்சியும் தேக்கமடைந்து விடுகிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தக பற்றாக்குறையும் உயர்ந்து விடுகிறது. இவ்வாறு ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)