'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது ... சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைய காரணம் என்ன?- வீ.அரிகரசுதன் - சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைய காரணம் என்ன?- வீ.அரிகரசுதன் - ...
தனியார் துறை வங்கிகளை விட கிரெடிட் கார்டு வணிகத்தில் பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:23

பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு நேர்மாறாக, தனியார் வங்கிகளின் கிரெடிட் கார்டு வர்த்தகம் சுருங்கி வருகிறது.பொருளாதார நெருக்கடி:தனியார் துறையில் முதலிடத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, அதன் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் குறைத்துக் கொண்டது.
அதே சமயம், பொதுத் துறை வங்கிகளின் இவ்வகை வர்த்தகம் பெருகி வருகிறது.அண்மையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டு வர்த்தகம் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில் 16.2 சதவீதமாக இருந்தது.கிரெடிட் கார்டு வர்த்தகத்தில், தனியார் வங்கிகளின் பங்களிப்பு குறைந்து வருவதால், இப்பிரிவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
பொதுத்துறை வங்கிகள்:இதே மாதங்களில் பொதுத் துறை வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 7.4 சதவீதம் அதிகரித்து 31 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், இதே மாதங்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் குறைந்து 1.47 கோடியாக சரிவடைந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளில், முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு ஏப்ரல் நிலவரப்படி 8 சதவீதம் அதிகரித்து 22.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வங்கியின் சார்பில், எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனம், ஜி.ஈ. கேப்பிட்டல் நிறுவனத்துடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. நாட்டில் கிரெடிட் கார்டு வழங்குவதில், எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நான்காம் இடத்தில் உள்ளது.
"அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்' என எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கதாம்பி நரஹரி தெரிவித்தார்பொதுத் துறை வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்ற ஏப்ரல் இறுதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள இவ்வங்கியின் கிரெடிட் கார்டு எண்ணிக்கை, 27 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சத்து 3ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.பேங்க் ஆப் இந்தியா:இதே மாதங்களில், பேங்க் ஆப் இந்தியாவின் கிரெடிட் கார்டு வளர்ச்சி 1 லட்சத்து 18 ஆயிரத்து 225 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1 லட்சத்து 20 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 67லிருந்து, 55 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.கார்ப்பரேஷன் பேங்கின் கிரெடிட் கார்டு புழக்கம் 53 ஆயிரத்து 194 என்ற எண்ணிக்கையில் இருந்து, 59 ஆயிரத்து 697 ஆக உயர்ந்துள்ளது. தனியார் துறையைப் பொறுத்தவரை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டு புழக்கம், சென்ற ஆண்டு ஏப்ரலில் இருந்தது போன்றே, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திலும் மாற்றமின்றி 33 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
எனினும், இதே மாதங்களில் எச்.எஸ்.பி.சி வங்கியின் கிரெடிட் கார்டு புழக்கம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 559லிருந்து, 6 லட்சத்து 13 ஆயிரத்து 877 ஆக குறைந்துள்ளது.இதே மாதங்களில் ஆர்.பி.எஸ். பேங்கின் கிரெடிட் கார்டு புழக்கம், 2 லட்சத்து 79 ஆயிரத்து 186லிருந்து 1லட்சத்து 55 ஆயிரத்து 511 ஆக சரிவடைந்துள்ளது.
வெளி‌‌யோற்றம்:எனினும், இதே காலத்தில் எச்.டீ.எப்.சி.பேங்கின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து, 56 லட்சத்து 50 ஆயிரமாகவும், சிட்டி பேங்கின் கிரெடிட் கார்டு புழக்கம் 22 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து, 23 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.இதே காலத்தில் டாயிஷ் பேங்க், பார்க்லேஸ் பேங்க் ஆகியவை இந்தியாவில் கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)