பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:46
மும்பை:பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, சென்ற மே மாதத்தில்,
1 லட்சத்து 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதையடுத்து, அம்மாதத்தில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 61 லட்சமாக சரிவடைந்துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை, 4 கோடியே 64 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரமாக உள்ளது.சென்ற மே மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்து 606 ஆக குறைந்துள்ளது.
இது, முந்தைய ஏப்ரல் மாதத்தை விட, 1.29 சதவீதம் (3 கோடியே 76 லட்சத்து 47 ஆயிரத்து 466) சரிவாகும்.மேலும், வெளிநாடுகளில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 1.62 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து 11 ஆயிரத்து 906 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2 லட்சத்து 8 ஆயிரத்து 476 ஆக சரிவடைந்துள்ளது.
இருப்பினும், "எக்சேஞ்ச் டிரேடட் பண்டு' திட்டங்களில் இணைந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.79 சதவீதம் உயர்ந்து, 6 லட்சத்து 23 ஆயிரத்து 757 லிருந்து, 6 லட்சத்து 53 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில், ஒட்டு மொத்த பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 0.65 சதவீதம் குறைந்து, 4 கோடியே 64 லட்சத்து 52 ஆயிரத்து 64 லிருந்து, 4 கோடியே 61 லட்சத்து 49 ஆயிரத்து 704 ஆக சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|