சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைய காரணம் என்ன?- வீ.அரிகரசுதன் -சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு குறைய காரணம் என்ன?- வீ.அரிகரசுதன் - ... கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு ...
பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து 3 லட்சம் முதலீட்டாளர்கள் விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:46

மும்பை:பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து, சென்ற மே மாதத்தில்,
1 லட்சத்து 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதையடுத்து, அம்மாதத்தில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 61 லட்சமாக சரிவடைந்துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை, 4 கோடியே 64 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல்,மே ஆகிய இரண்டு மாதங்களில், பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரமாக உள்ளது.சென்ற மே மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்து 606 ஆக குறைந்துள்ளது.
இது, முந்தைய ஏப்ரல் மாதத்தை விட, 1.29 சதவீதம் (3 கோடியே 76 லட்சத்து 47 ஆயிரத்து 466) சரிவாகும்.மேலும், வெளிநாடுகளில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 1.62 சதவீதம் குறைந்து, 2 லட்சத்து 11 ஆயிரத்து 906 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2 லட்சத்து 8 ஆயிரத்து 476 ஆக சரிவடைந்துள்ளது.
இருப்பினும், "எக்சேஞ்ச் டிரேடட் பண்டு' திட்டங்களில் இணைந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4.79 சதவீதம் உயர்ந்து, 6 லட்சத்து 23 ஆயிரத்து 757 லிருந்து, 6 லட்சத்து 53 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில், ஒட்டு மொத்த பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 0.65 சதவீதம் குறைந்து, 4 கோடியே 64 லட்சத்து 52 ஆயிரத்து 64 லிருந்து, 4 கோடியே 61 லட்சத்து 49 ஆயிரத்து 704 ஆக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)