உள்நாட்டில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.78 கோடியாக வளர்ச்சிஉள்நாட்டில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.78 கோடியாக வளர்ச்சி ... கடும் சரிவு: இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.57-ஐ தொட்டது கடும் சரிவு: இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.57-ஐ தொட்டது ...
அள்ளித்தந்தது தங்கம்... அதிர்ச்சியளித்தது வெள்ளி...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
03:36

கடந்த ஓராண்டில் வெள்ளியை விட, தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியை, கடந்தாண்டு, 57 ஆயிரத்து 440 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு, தற்போது, 2,955 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். தங்க ஆபரணம்:அதே சமயம், கடந்தாண்டு, ஒரு சவரன் தங்க ஆபரணத்தை, 16 ஆயிரத்து 864 ரூபாய்க்கு வாங்கியவர்களுக்கு, தற்போதைய விலைப்படி 5,784 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்.
சர்வதே அளவில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னர், நகைக்காக வாங்கியவர்கள் தற்போது, இதை பாதுகாப்பான, அதிக லாபம் கிடைக்கும் முதலீடாக கருதி, அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாதது, தொழில் துறையில் எதிர்பாராத நஷ்டம் போன்றவற்றால், தங்கத்தில் முதலீடு செய்வது உயர்ந்துள்ளது. இதை உறுதிபடுத்துவது போல், தங்கம் விலை தொடர்ந்து, உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த, 2010-11ம் நிதி ஆண்டில் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்தது. 2010 அக்டோபர் இறுதியில், ஒரு கிராம் வெள்ளி விலை, 25 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதுவே, 2011ல், 55 ரூபாய் என்ற அளவிற்கு இரட்டிப்பாக உயர்ந்தது.வெள்ளியில் முதலீடு :இதையடுத்து, வெள்ளி விலை மேலும் உயரும் என்ற ஆர்வத்தில் பலரும் வெள்ளியில் முதலீடு செய்தனர். ஆனால், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
கடந்த, ஜூன் 1ம் தேதியன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 61.45 ரூபாயாகவும், ஒரு கிலோ, 57 ஆயிரத்து 440 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், 21ம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம், 58.30 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ, 54 ஆயிரத்து 485 ரூபாய் ஆகவும் சரிவடைந்துள்ளது. இதன்படி, கிராமுக்கு, 3.15 ரூபாய், கிலோவுக்கு, 2,955 ரூபாய் இழப்பு :ஏற்பட்டுள்ளது.அதிக வருவாய்:முதலீட்டாளர்களுக்கு வெள்ளி கைவிட்டாலும், தங்கம் கை கொடுத்துள்ளது. கடந்தாண்டு, ஜூன்,1ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 2,108க்கும், ஒரு சவரன் 16 ஆயிரத்து 864க்கும் விற்பனையானது.
தற்போது தங்கத்தின் விலை, கிராம், 2,831, சவரன், 22 ஆயிரத்து 648 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிறது. கிராமுக்கு, 623 ரூபாயும், சவரனுக்கு, 4,984 ரூபாயும் வருவாய் ஈட்டித் தந்துள்ளது. இதன்படி, வெள்ளியை விட, தங்கம், முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் அளிப்பதாக உள்ளது.தங்கம், வெள்ளி விலை குறித்த விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -
 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)