தனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடிதனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடி ... கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக ... ...
வர்த்தகம் » ஜவுளி
பட்டாடைகள் விற்பனையை உயர்த்த கோ-ஆப்டெக்ஸ் திட்டம்-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2012
00:43

பட்டுச் சேலை விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள,'கனவு நனவு' திட்டத்தில், ஆறு மாதங்களுக்குள், ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து பட்டு, பருத்தி ஆடைகளை, 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கைத்தறி துணிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள வரவேற்பை பயன்படுத்தி, இவ்வாண்டு வெளிநாட்டு ஏற்றுமதி மூலம், ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கும், கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது.
கனவு நனவு திட்டம்:கோ-ஆப்டெக்ஸ், சமீபத்தில் அறிமுகப்படுத்திய, 'கனவு நனவு' திட்டத்தில், பட்டுச்சேலைகளை மாத தவணையில் வாங்கலாம். 100 ரூபாயிலிருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தலாம். இத்திட்டத்தில், ஒன்பது மாதங்கள் தவணை தொகை கட்டியவர்களுக்கு, பத்தாவது மாத தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தும். பத்தாவது மாதம் முடிவில், சேமிப்பில் வாடிக்கையாளர்கள், 58 சதவீதம் கூடுதல் பலன் பெறலாம்.
அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைங்களில் இத்திட்டத்தில் சேர்ந்து, இந்தியாவில் எந்தவொரு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திலும், தேவையான துணி ரகங்களை பெற்றுக்கொள்ளவும், இத்திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பருத்தி ஆடைகள்:இத்திட்டம் துவங்கப்பட்ட, 18 நாட்களில், 8,337 பேர் சேர்ந்துள்னர். ஆறு மாதங்களில், இத்திட்டத்தில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து, இதன் மூலம், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளின் விற்பனையை, 50 கோடி ரூபாய் வரை உயர்த்துவதற்கு கோ-ஆப்டெக்ஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி:சமையலறை துணி வகைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள்,தோள் பைகளுக்கு ஜெர்மனி,நெதர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இத்தாலி நாடுகளில் வரவேற்பு உள்ளது. இந்நாடுகளுக்கு, கடந்தாண்டு இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஐந்து கோடி ரூபாய் வரை கைத்தறி துணிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனங்களின் மூலம் கடந்த ஆண்டு பட்டு மற்றும் பருத்தி துணி வகைகள், 217 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டு, இதை இருமடங்காக 434 கோடி ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)