பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:47
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட கடும் சரிவு நிலை போன்றவை இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து வர்த்தகம் சரிவை சந்தித்தது.மேலும், ஜெர்மன் வர்த்தகத் துறை மீதான நம்பிக்கை குறித்த தர குறியீடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து போனது மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
இருப்பினும், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., சிப்லா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 60 புள்ளிகள் சரிவடைந்து, 16,972.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,016.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,807.80 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 18.95 புள்ளிகள் குறைந்து, 5,146.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின், இடையே அதிகபட்சமாக 5,159.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,146.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|