பதிவு செய்த நாள்
28 ஜூன்2012
00:24

கடந்த ஆண்டு, ஆமணக்கு வித்து, விலை கிடு கிடுவென உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது போன்று, உச்சத்தில் இருந்த ஆமணக்கு எண்ணெய் விலையும், சரிவடைந்துள்ளது.ஆமணக்கு உற்பத்தி, சாதனை அளவை எட்டியுள்ளதையடுத்து, அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆமணக்கு எண்ணெய்:கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஒரு குவிண்டால் ஆமணக்கு 6,000 ரூபாயா கவும், 10 கிலோ ஆமணக்கு எண்ணெய், 1,240 ரூபாயாகவும் இருந்தது.இவை, ஜூன் மாதம் 25ம் தேதி நிலவரப் படி, முறையே 4,935 ரூபாய் மற்றும் 1,027 ரூபாயாக குறைந்திருந்தது.நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி 2ம் தேதி ஒரு குவிண்டால் ஆமணக்கு, 4,000 ரூபாயாகவும், 10 கிலோ ஆமணக்கு எண்ணெய் விலை 840 ரூபாயாக மேலும் குறைந்தது.
நடப்பு ஜூன் 1ம் தேதி ஒரு குவிண்டால் ஆமணக்கு 3,165 ரூபாயாகவும்,10 கிலோ ஆமணக்கு எண்ணெய் 673 ரூபாயாகவும், வீழ்ச்சி கண்டது.மேலும், இதுவரை இல்லாத அளவில்,சென்ற 9ம் தேதி ஒரு குவிண்டால் ஆமணக்கு 2,925 ரூபாயாகவும்,10 கிலோ ஆமணக்கு எண்ணெய் விலை, 625 ரூபாய் என்ற அளவிலும் குறைந் தது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக ஆமணக்கு மற்றும் எண்ணெய் விலை, சற்று ஏற்றம் கண்டது. தற் போது, ஒரு குவிண்டால் ஆமணக்கு 3,315 ரூபாயாகவும், 10 கிலோ ஆமணக்கு எண்ணெய் விலை 703 என்ற அளவிலும் உள்ளது.ஆமணக்கு உற்பத்தி உயர்ந்துள்ளதால், கடந்த 17 மாதங்களில், ஆமணக்கு, 45 சதவீதமும், ஆமணக்கு எண்ணெய் விலை, 43 சதவீதமும் குறைந்துள்ளது.
பரப்பளவு: குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேரில், ஆமணக்கு பயிரிடப்பட்டது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில் 8 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.ஒட்டு மொத்த அளவில், இந்தியாவில் சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஆமணக்கு பயிரிடும் பரப்பளவு 3 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து, 12 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில் 8 லட்சத்து 82 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது.
உற்பத்தி:நடப்பு நிதிஆண்டில், நாட்டின் ஆமணக்கு உற்பத்தி, கடந்த ஆண்டை விட 5 லட்சம் டன் அதிகரித்து, 17-17.5 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய எண்ணெய் உற்பத்தி யாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு எண்ணெய் பருவத்தில், ஆமணக்கு உற்பத்தி பெருகியுள்ளது. அதனால் அதன் விலை குறைந்துள்ளது. தேவை அதிகரிக்கும் வரை இந்த நிலை நீடிக் கும். பருவமழை தவறும்பட்சத்தில், விலை மேலும் உயரும்' என்றார்.
ஆமணக்கு விதை நடவுப் பணிகள் ஆகஸ்ட், செப்டம்பரில் துவங்கும். ஜனவரி முதல் மே வரை அறுவடை காலமாகும். குஜராத் சந்தைகளுக்கு, 50 ஆயிரம் முதல், 70 ஆயிரம் வரை ஆமணக்கு மூட்டைகள் (ஒரு மூட்டை- 75 கிலோ) வரத்து உள்ளது.கடந்த ஆண்டு, சந்தைகளில் ஆமணக்கு உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைவாக இருந்தது. சர்வதேச சந்தையிலும் தேவை அதிகமாக காணப்பட்டது. அதனால் ஆமணக்கு விலை, புதிய உச்சத்தை எட்டியது. இதனால் ஊக்கமடைந்த விவசாயிகள், அதிக அளவில் ஆமணக்கு சாகுபடி மேற்கொண்டனர்.
சோயா:இதனால் உற்பத்தி உயர்ந்தது. ஆனால், அதற்கேற்ப தேவை அதிகரிக்காததால், ஆமணக்கு விலை வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு, ஆமணக்கு பயிரிடும் பரப்பளவு 20 சதவீதம் குறையும் என, எதிர் பார்க்கப் படுவதாக முன்பேர சந்தை ஆய்வாளர் ஒருவர்தெரிவித்தார். நடப்பாண்டில், ஆமணக்கு மட்டுமின்றி, சோயா, எள் ஆகியவற்றின் விலையும் குறையும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுசில் கோயங்கா தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|