முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்ததுமுக்கிய எட்டு துறைகள் உற்பத்தி வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்தது ... சென்னையில் மெகா மேம்பாலங்கள்: ரூ.231 கோடியில் அமைகிறது சென்னையில் மெகா மேம்பாலங்கள்: ரூ.231 கோடியில் அமைகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தையில் எழுச்சி நிலை ஒரே நாளில் "சென்செக்ஸ்' 439 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
04:26

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், கடன் பிரச்னையில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு முழு அளவில், உதவி புரிய முடிவு செய்துள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் 2 சதவீத அளவிற்கும், அமெரிக்கா மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளில், 1 சதவீத அளவிற்கும் வர்த்தகம் அதிகரித்திருந்தது.ஒட்டு மொத்த அளவில், உலகின் பல்வேறு நாடுகளின் சாதகமான சூழலால், இந்திய பங்குச் சந்தைகளிலும், காலையில் வர்த்தகம் துவங்கியது முதல், முடிவடையும் வரை, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.அன்னிய முதலீடு:நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, உலோகம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது.
பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள் நேற்று 3,047 கோடி ரூபாயை (உத்தேச மதிப்பீடு), முதலீடு செய்தன. இதுவும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.
ரூபாய் மதிப்பு:கடந்த ஒரு சில மாதங்களாக, தொடர்ந்து சரிவடைந்து வந்த டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. வர்த்தகம் முடியும் போது, ரூபாயின் மதிப்பு 1.17 ரூபாய் உயர்ந்து,
55.64ல் நிலைகொண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 439.22 புள்ளிகள் அதிகரித்து, 17,429.98 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,448.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,134.61 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், கோல் இந்தியா நிறுவனத்தை தவிர, ஏனைய 29 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 129.75 புள்ளிகள் உயர்ந்து, 5,278.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,286.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,189 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)