பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:27
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 22ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 76 கோடி டாலர் (4,180 கோடி ரூபாய்) குறைந்து, 28 ஆயிரத்து 863 கோடி டாலராக (15 லட்சத்து 87 ஆயிரத்து 465 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய 15ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 28 ஆயிரத்து 939 கோடி டாலராக (15 லட்சத்து 91 ஆயிரத்து 645 கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வாரத்தில், அன்னிய செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25 ஆயிரத்து 578 கோடி டாலர் என்றளவில் உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 2,558 கோடி டாலர் என்றளவிலும், எஸ்.டீ.ஆர்.மதிப்பு, 437 கோடி டாலர் என்றளவிலும் உள்ளன. மேலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு,
289 கோடி டாலர் என்றளவில் உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|