பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:30
புதுடில்லி:இந்தியா - இந்தோனேஷியா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, வரும் 2015ம் ஆண்டில், 4,500 கோடி டாலராக (2 லட்சத்து 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இந்தியாவிற்கான இந்தோனேஷிய தூதர் தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளுக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே, இத்துறைகளில், இந்தியாவோடு இணைந்து செயல்பட இந்தோ னேஷியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 1,000 கோடி டாலர் (55 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. இதை, வரும் 2015ம் ஆண்டில், 2,500 கோடி டாலராக (13 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கனவே, இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 2,000 கோடி டாலரைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இந்தோனேஷியாவின், ஜகர்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டத்தில், இரு நாடுகளின் அமைச்சர்களின் முன்னிலையில், வரும் 2015ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தின் இலக்கை, அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.வரும் அக்டோபர் மாதம், ஜகர்தாவில்,'டிரேட்எக்ஸ்போ' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் மூலம், வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|