நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 28,863 ‌கோடி டாலர் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 28,863 ‌கோடி டாலர் ... நிதி பற்றாக்குறை 27 சதவீதத்தை எட்டியது நிதி பற்றாக்குறை 27 சதவீதத்தை எட்டியது ...
இந்தியா - இந்தோனேஷியா வர்த்தக இலக்கு ரூ.2.47 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2012
02:30

புதுடில்லி:இந்தியா - இந்தோனேஷியா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை, வரும் 2015ம் ஆண்டில், 4,500 கோடி டாலராக (2 லட்சத்து 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இந்தியாவிற்கான இந்தோனேஷிய தூதர் தெரிவித்துள்ளர்.
அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளுக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே, இத்துறைகளில், இந்தியாவோடு இணைந்து செயல்பட இந்தோ னேஷியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 1,000 கோடி டாலர் (55 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. இதை, வரும் 2015ம் ஆண்டில், 2,500 கோடி டாலராக (13 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கனவே, இவ்விரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 2,000 கோடி டாலரைத் தாண்டியுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இந்தோனேஷியாவின், ஜகர்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டத்தில், இரு நாடுகளின் அமைச்சர்களின் முன்னிலையில், வரும் 2015ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்தின் இலக்கை, அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.வரும் அக்டோபர் மாதம், ஜகர்தாவில்,'டிரேட்எக்ஸ்போ' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் மூலம், வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)