இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன்இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன் ... ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம் ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேங்காய் விளைச்சல், பயன்பாட்டில் இந்தியா முதலிடம் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
01:39

தமிழகத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தேங்காய் விளைச்சலில் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தேங்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தோனேஷியா : இது குறித்து ஆசிய பசிபிக் தேங்காய் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் தென்னந் தோப்புகளின் பரப்பளவு 19 கோடி ஹெக்டேராக உள்ளது.
பரப்பளவு குறைந்துள்ள போதிலும், உலகளவில் தேங்காய் விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியா:உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.இந்நாடு 1 கோடி ஹெக்டேர் தென்னந்தோப்பின் மூலம் 38 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இங்கு தேங்காய் பயன்பாடு, 113 சதவீதமாக உள்ளது. அதனால் இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
தமிழகம்:இந்தியாவில், 18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் வர்த்தக ரீதியில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. விளைச்சலைப் பொருத்தவரை, லட்சத் தீவில் தான் ஒரு ஹெக்டேருக்கு மிக அதிகமாக, அதாவது 19 ஆயிரத்து 630 தேங்காய்கள் விளைகின்றன. இது, தமிழகத்தில் ஒரு ஹெக்டேரில் 13 ஆயிரத்து 771 ஆகவும், ஆந்திராவில் 9,327 ஆகவும், கேரளா மற்றும் கர்நாடகாவில், முறையே 7,365 மற்றும் 5,193 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)