நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.12,980 கோடி சரிவுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.12,980 கோடி சரிவு ... சாம்பல் நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு சாம்பல் நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு ...
தாவர எண்ணெய் இறக்குமதி 64 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2012
01:00

கோல்கட்டா:நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), சென்ற ஜூன் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 24.65 சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தோனேஷியாசென்ற நவம்பர் முதல் ஜூன் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 63.95 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 24.65 சதவீதம் (51.30 லட்சம் டன்) அதிகமாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், இந்தோனேஷியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், கச்சா தாவர எண்ணெயின் பங்களிப்பு, 81 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் பங்களிப்பு, 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 6.38 லட்சம் டன்னிலிருந்து, 12.09 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.பாமாயில் பொருட்களின் இறக்குமதி, 39.59 லட்சம் டன்னிலிருந்து, 46.77 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
'சாப்ட் ஆயில்' எனப்படும் கலப்பு எண்ணெய் இறக்குமதி, 9.88 லட்சம் டன்னிலிருந்து, 15.78 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய்:உதாரணமாக, சோயா எண்ணெயுடன், சூரிய காந்தி எண்ணெயை சேர்ப்பது கலப்பு எண்ணெய் எனப்படுகிறது.இந்தோனேஷியா, அதன் எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீது, 9 சதவீதமும், கச்சா தாவர எண்ணெய் மீது, 18 சதவீதமும் ஏற்றுமதி வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)