பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
01:00
கோல்கட்டா:நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), சென்ற ஜூன் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 24.65 சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தோனேஷியாசென்ற நவம்பர் முதல் ஜூன் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 63.95 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 24.65 சதவீதம் (51.30 லட்சம் டன்) அதிகமாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், இந்தோனேஷியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், கச்சா தாவர எண்ணெயின் பங்களிப்பு, 81 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் பங்களிப்பு, 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, 6.38 லட்சம் டன்னிலிருந்து, 12.09 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.பாமாயில் பொருட்களின் இறக்குமதி, 39.59 லட்சம் டன்னிலிருந்து, 46.77 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
'சாப்ட் ஆயில்' எனப்படும் கலப்பு எண்ணெய் இறக்குமதி, 9.88 லட்சம் டன்னிலிருந்து, 15.78 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய்:உதாரணமாக, சோயா எண்ணெயுடன், சூரிய காந்தி எண்ணெயை சேர்ப்பது கலப்பு எண்ணெய் எனப்படுகிறது.இந்தோனேஷியா, அதன் எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் மீது, 9 சதவீதமும், கச்சா தாவர எண்ணெய் மீது, 18 சதவீதமும் ஏற்றுமதி வரி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|