பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
12:13
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு ரூ.140, உளுந்து ரூ.400 , கடலை பருப்பு ரூ.100, புண்ணாக்கு ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் வத்தலும் குவின்டாலுக்கு ரூ.150 வரை உயர்ந்துள்ளது.விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு ரூ.3160 லிருந்து 3300, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.1860 லிருந்து 1870, நிலக்கடலை பருப்பு மூடைக்கு ரூ.5400 லிருந்து 5500, கடலை புண்ணாக்கு ரூ.3700 லிருந்து 3900, உளுந்து ரூ. 4200 லிருந்து 4600, பர்மா உளுந்து ரூ.3900 லிருந்து 4100, உளுந்தம் பருப்பு ரூ.5600 லிருந்து 5800, பர்மா உளுந்தம் பருப்பு ரூ.4750 லிருந்து 5200, பொடி உளுந்தம்பருப்பு ரூ.3900 லிருந்து 4700, பாசிப்பயறு நாடு ரூ.4200 லிருந்து 4400, சம்பா மிளகாய் வத்தல் குவின்டாலுக்கு ரூ.4100 லிருந்து 4250 ஆக உயர்ந்துள்ளது. கொண்டைக் கடலை ரூ.5600 லிருந்து 5200, பொரி கடலை ரூ.4160 லிருந்து 3200, மைதா ரூ.2480 லிருந்து 2460, ரவை ரூ.2480 லிருந்து 2460 ஆக குறைந்துள்ளது.
பாமாயில் டின்னுக்கு ரூ.1035, சூரியகாந்தி எண்ணெய் ரூ.1230, பொடி உளுந்து மூடைக்கு ரூ. 3600, துவரை ரூ.4600, பொடித் துவரை ரூ.3800, துவரம் பருப்பு ரூ. 6900, பொடி துவரம் பருப்பு ரூ. 5200, லயன் பாசிப்பயறு ரூ.4600, பாசிப் பருப்பு ரூ.5800, பொடிப் பாசிப் பருப்பு ரூ.5500 ஆக உள்ளது. சோடை வத்தல் 1400 லிருந்து 1500 ரூபாயாக உள்ளது. "வத்தல் வரத்து குறைவாலும், போதுமான விளைச்சல் இல்லாததாலும் விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை தமிழகத்திற்கு குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதால், விலை அதிகரித்துள்ளதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|