பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
15:14
வாஷிங்டன்: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஒபாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது: இந்தியா , சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் பல்வேறு துறைகளில் இந்தியா இதனை முதலீட்டை அதிகரிக்காமல் இழந்து வருகிறது. தற்போது இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுக்கு உகந்த சூழல் குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் முதலீடு என்ற கொள்கையை அமெரிக்காவும் மறுபரிசீலனை செய்ய உள்ளது. வளர்ச்சி என்பது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து ‘டைம்’ பத்திரிகை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தது. அதில் பிரதமர் மன்மோகன்சி்ங் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன. இந்தியா-அமெரிக்க நல்லுறவு இருந்து வரும் நிலையில் அதிபர் ஒபாமாவின் இந்த பேட்டி இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|