பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
23:51
சென்னை: போர்டு இந்தியா நிறுவனத்தின், கார் மற்றும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை, சென்னை-மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம், 396 கோடி ரூபாய் திட்ட செலவில், கார்களுக்கான இன்ஜின் ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது.இதுகுறித்து, போர்டு இந்தியா நிறுவனத்தின் பிரசிடெண்ட் மற்றும் நிர்வாக இயக்குனர் மைக்கேல் போனேஹம் கூறியதாவது:நிறுவனத்தின், கார் தொழிற்சாலை வளாகத்தில், கடந்த 2008ல், ஆண்டுக்கு, 60 ஆயிரம் இன்ஜின்கள் தயாரிக்கும் திறனில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. பின்பு, இந்த எண்ணிக்கை, 2010ம் ஆண்டில், 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது.இவ்வாலையில், 12 வகையான பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் ஐந்து வகையான டீசல் இன்ஜின்கள் என, 17 வகையான இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஆறு வகை இன்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிறுவனத்தில், உற்பத்தியாகும் மொத்த டீசல் இன்ஜின்களில், 80 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த பெட்ரோல் இன்ஜின் தயாரிப்பில், 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தற்போது, 7.20 கோடி டாலர் (396 கோடி ரூபாய்) திட்ட செலவில், ஆண்டுக்கு, 3.40 லட்சம் இன்ஜின் தயாரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்த செலவில், 50 சதவீதம் இயந்திரங்களுக்கும், 25 சதவீதம் கருவிகளுக்கும், 10 சதவீதம் கட்டடங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. விரிவாக்கத்திற்காக, கூடுதலாக, 220 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.இங்கு தயாரிக்கப்படும், இன்ஜின்களில், 40 சதவீதம் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு, இன்ஜின் தயாரிப்பு பிரிவு துவங்கப்பட்டதில் இருந்து, இதுவரை, நான்கு லட்சம் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மைக்@கல் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|