அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி ... இந்தியா,சீனாவின் மந்தநிலையால்... உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக குறையும் இந்தியா,சீனாவின் மந்தநிலையால்... உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போர்டு இந்தியா நிறுவனம் இன்ஜின் ஆலை ரூ.396 கோடியில் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2012
23:51

சென்னை: போர்டு இந்தியா நிறுவனத்தின், கார் மற்றும் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை, சென்னை-மறைமலை நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம், 396 கோடி ரூபாய் திட்ட செலவில், கார்களுக்கான இன்ஜின் ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது.இதுகுறித்து, போர்டு இந்தியா நிறுவனத்தின் பிரசிடெண்ட் மற்றும் நிர்வாக இயக்குனர் மைக்கேல் போனேஹம் கூறியதாவது:நிறுவனத்தின், கார் தொழிற்சாலை வளாகத்தில், கடந்த 2008ல், ஆண்டுக்கு, 60 ஆயிரம் இன்ஜின்கள் தயாரிக்கும் திறனில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. பின்பு, இந்த எண்ணிக்கை, 2010ம் ஆண்டில், 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது.இவ்வாலையில், 12 வகையான பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் ஐந்து வகையான டீசல் இன்ஜின்கள் என, 17 வகையான இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், ஆறு வகை இன்ஜின்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நிறுவனத்தில், உற்பத்தியாகும் மொத்த டீசல் இன்ஜின்களில், 80 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்த பெட்ரோல் இன்ஜின் தயாரிப்பில், 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தற்போது, 7.20 கோடி டாலர் (396 கோடி ரூபாய்) திட்ட செலவில், ஆண்டுக்கு, 3.40 லட்சம் இன்ஜின் தயாரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்த செலவில், 50 சதவீதம் இயந்திரங்களுக்கும், 25 சதவீதம் கருவிகளுக்கும், 10 சதவீதம் கட்டடங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. விரிவாக்கத்திற்காக, கூடுதலாக, 220 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.இங்கு தயாரிக்கப்படும், இன்ஜின்களில், 40 சதவீதம் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு, இன்ஜின் தயாரிப்பு பிரிவு துவங்கப்பட்டதில் இருந்து, இதுவரை, நான்கு லட்சம் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மைக்@கல் கூறினார்.


Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)