பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
00:16
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று, ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், நடப்பு வாரத்தின், முதல் இரண்டு வர்த்தக தினங்களில், பங்கு வியாபாரம், சற்று மந்தமாக இருந்தது.
இந்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளில், நேற்று பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதை யடுத்து, இந்திய பங்கு சந்தைகளிலும், பல துறைகளை சேர்ந்த, நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கை மாறின.குறிப்பாக, நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, பொறியியல், வங்கி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட சில துறைகளை சேர்ந்த நிறுவன பங்கு களுக்கு, தேவை குறைவாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 79.71 புள்ளிகள் அதிகரித்து, 17,185.01 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,205.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,038.59 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 23.45 புள்ளிகள் உயர்ந்து, 5,216.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,222.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,169.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|