பதிவு செய்த நாள்
22 ஜூலை2012
02:26
புதுடில்லி:ஓராண்டில் 5 லட்ச ரூபாய் வரை ஊதிய வருவாய் பெறுவோர், தனியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தேவையில்லை என, நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஊதியம் தவிர, இதர வருவாய் ஏதுமின்றியும், அதேசமயம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வட்டிவருவாய் ஈட்டியிருக்கும்பட்சத்தில், தனியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
இந்த சலுகையை பெற, ஊழியர்கள் தங்கள் வருமான வரி கணக்கு எண் (பான்) மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டி விவரங்களை, நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.ஊதியத்தில் வரி பிடித்தம் செய்து, அதைஅரசுக்கு செலுத்தும் நிறுவனத்திடம் இருந்து, ஊழியர்கள் வருமான வரி படிவம் 16-ஐ பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஊதியம் பெறாமலும், கூடுதலாக வரியை செலுத்தாதவர்களும் தகுதியானவர்கள்.ஆனால், இது, வரி தாக்கல் தொடர்பாக, வருமான வரித் துறையிடம் இருந்து அறிவிக்கை கிடைக்கப் பெற்றவர்களுக்கு பொருந்தாது என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|