மக்காச்சோளம் ஏற்றுமதி 35 லட்சம் டன்மக்காச்சோளம் ஏற்றுமதி 35 லட்சம் டன் ... நாட்டின் மருந்து ஏற்றுமதி2,500 கோடி டாலராக உயரும் நாட்டின் மருந்து ஏற்றுமதி2,500 கோடி டாலராக உயரும் ...
ஊதியம் ரூ.5 லட்சமாக இருந்தால் வரி தாக்கல் தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2012
02:26

புதுடில்லி:ஓராண்டில் 5 லட்ச ரூபாய் வரை ஊதிய வருவாய் பெறுவோர், தனியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தேவையில்லை என, நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஊதியம் தவிர, இதர வருவாய் ஏதுமின்றியும், அதேசமயம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வட்டிவருவாய் ஈட்டியிருக்கும்பட்சத்தில், தனியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
இந்த சலுகையை பெற, ஊழியர்கள் தங்கள் வருமான வரி கணக்கு எண் (பான்) மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டி விவரங்களை, நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.ஊதியத்தில் வரி பிடித்தம் செய்து, அதைஅரசுக்கு செலுத்தும் நிறுவனத்திடம் இருந்து, ஊழியர்கள் வருமான வரி படிவம் 16-ஐ பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஊதியம் பெறாமலும், கூடுதலாக வரியை செலுத்தாதவர்களும் தகுதியானவர்கள்.ஆனால், இது, வரி தாக்கல் தொடர்பாக, வருமான வரித் துறையிடம் இருந்து அறிவிக்கை கிடைக்கப் பெற்றவர்களுக்கு பொருந்தாது என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)