பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:29
புதுடில்லி:வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் "அசிட்டோனு'க்கு விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரி, மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி வரையில் இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும் என மத்திய நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.
மருந்து,வேளாண் ரசாயன பொருட்கள் மற்றும் எரிசாராய உற்பத்தியில் "அசிட்டோன்' பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து அதிகளவில் "அசிட்டோன்' இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி "அசிட்டோன்' இறக்குமதிக்கு தற்காலிக அடிப்படையில் பொருள் குவிப்பு வரி விதிக்கப்பட்டது. பின்னர், இது 2008ம் ஆண்டு மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகள் செல்லத்தக்க இந்த வரிவிதிப்பு, சென்ற ஜூன் 18ம் தேதியுடன் காலாவதியானது. இதைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஓராண்டிற்கு வரிவிதிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|