பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:30
கோல்கட்டா:இந்தியா, வங்கதேசம் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 430 கோடி டாலர் (23,650 கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது என, வங்கதேச வர்த்தக அமைச்சர் குலாம் முகமது காதர் தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து, பருத்தி, பெட்ரோலிய பொருட்கள், மோட்டார் வாகனம், உருக்கு பொருட்கள், இயற்கை ரசாயனம் உள்ளிட்ட பொருட்களை, வங்கதேசம் இறக்குமதி செய்து கொள்கிறது.
வங்கதேசத்திலிருந்து, காகித நூலிழை, சிமென்ட், தாமிரம் மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை, இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது.வங்கதேசத்தில் வேளாண், மோட்டார் வாகனம், அடிப்படை கட்டமைப்பு, நுகர்பொருட்கள், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது. தற்போது, இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், 430 கோடி டாலர் (23,650 கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என, முகமது காதர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|