பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
00:35
புதுடில்லி:பருவமழை குறைந்துள்ளதை வைத்து, அரிசி, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வேளாண் துறை செயலர் ஆசிஷ் பகுகுணா தெரிவித்தார்.கையிருப்பு:போதுமான அளவிற்கு உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதால், ஏற்றுமதிக்கு தடை விதிக்க தேவையில்லை.
சர்வதேச சந்தையில் இந்தியா நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால், ஏற்றுமதி தொடர வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.கடந்த ஆண்டு, உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவாக 25.74 கோடி டன்னை எட்டியது. இதில், நெல் உற்பத்தி 10.43 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி 9.39 கோடி டன்னாகவும் இருந்தது.கோதுமை :இதையடுத்து, சென்ற ஆண்டு செப்டம்பரில், மத்திய அரசு, கோதுமை மற்றும் சாதாரண அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது. அது முதல், தற்போது வரை, 50 லட்சம் டன் சாதாரண அரிசியும், 15 லட்சம் டன் கோதுமையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.அண்மையில், கிடங்கு பற்றாக்குறையால், மேலும் 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
மேலும் பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருட்களின் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,) 35 லட்சம் டன் சர்க்கரை, 1.50 கோடி பருத்தி பொதிகள் ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பருவமழை:இந்நிலையில், நடப்பாண்டு இதுவரை 22 சதவீத அளவிற்கு பருவமழை குறைந்துவிட்டது. இதனால், உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. உணவு தானியங்கள் விளைச்சல் குறையும் என்று தெரிகிறது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு எதிரொலிக்கும் என்பதால், நெல், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என குரலெழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|