நாட்டின் சில்லரை மருந்து விற்பனை சந்தை ரூ.60,000 கோடி நாட்டின் சில்லரை மருந்து விற்பனை சந்தை ரூ.60,000 கோடி ... பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா உயர்வு பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலும்... அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு ரூ.55,935 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
23:19

புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.), நடப்பு 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலுமாக, மேற்கொண்ட முதலீடு, 1,017 கோடி டாலராக (55,935 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்குகள்நாட்டின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில்பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளிலும், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும், அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.நாட்டின் பங்கு வர்த்தகம், கடந்த ஒரு சில வாரங்களாக, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடு அதிகரித்துள்ளது. இது, இந்திய பங்குச் சந்தைகளில், இந்நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.நடப்பு ஜூலை மாதம், 20ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 167 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இருப்பினும், சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட சரிவு நிலை போன்றவற்றால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக, 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன.நடப்பு ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 120.41 புள்ளிகள் குறைந்து, 17,158.14 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்ற மாத இறுதியில்,மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த பிரணாப் முகர்ஜியின் ராஜினாமாவை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், நிதித் துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதையடுத்து, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற கருத்தால், பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக, பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள், விரைந்து அமல்படுத்தப்படும் நிலையில், பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்படும் என்பதுடன், பங்கு வர்த்தகமும் சூடுபிடிக்கும்.நடப்பு ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், 34,611 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 25,357 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இக்காலகட்டத்தில், இந்நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு, 9,254 கோடி ரூபாயாக உள்ளது.கடன் பத்திரங்கள்அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் இதுவரையிலுமாக, கடன் பத்திரங்களில், 1,514 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. கடந்த 2011ம் ஆண்டில், இந்நிறுவனங்களின் நிகர கடன் பத்திர முதலீடு, 20,293 கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாண்டில், இந்நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 2,812 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.பதிவு பெற்ற நிறுவனங்கள்கடந்த 2011ம் ஆண்டில், சர்வதேச மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இல்லாததால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், முதலீடு செய்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டன.ஜூலை 20ம் தேதி வரையிலுமாக "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,752 ஆகவும், துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,350 ஆகவும் இருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)