பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:20
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள் கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளிலும், வர்த்தகம் மிகவும்மந்தமாகவே இருந்தது.கடந்த வாரம், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தில், ஸ்பெயின் நாட்டு வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மறு முதலீட்டிற்கு 3,000 கோடி யூரோ வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.எனினும், ஸ்பெயின் நாட்டு வங்கிகளின் நிதிநிலை மேலும் மோசம் அடைந்திருக்கக் கூடும் என்ற கருத்தால், ஐரோப்பிய பங்கு சந்தைகளில் நேற்று பங்கு வியாபாரம் பாதிப்படைந்தது. இதன் தாக்கம்,இந்திய பங்கு சந்தைகளிலும்எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம், மோட்டார் வாகனம்உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை மிகவும்சரிவடைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 281.09 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 16,877.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,047.73 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,849.28 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்'கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மருந்து துறையைச் சேர்ந்த சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய அனைத்து நிறுவன பங்குகளின் விலையும் சரிவடைந்து காணப்பட்டன.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' 87.15 புள்ளிகள் குறைந்து, 5,117.95 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,164.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,108.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|