பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
23:33
சேலம்: அலுமினிய பாத்திரங்களின் விலை, கிலோவுக்கு, ஐந்து முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.வீடுகள் மற்றும் ஓட்டல்களில், சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பாத்திரங்களில், அலுமினிய பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில், சென்னை, சேலம், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவை, கடந்த மார்ச் வரை, ஒரு கிலோ 220 முதல், 230 ரூபாய் வரை விற்பனையாயின. ஏப்ரலில், கிலோ ஒன்றுக்கு, 5-10 ரூபாய் வரை அதிகரித்து விட்டது.சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பாத்திரக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் தயாரிக்கப்படும் அலுமினிய பாத்திரங்கள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்துக்கு பிறகு, அலுமினிய பாத்திரங்களின் விலை திடீரென்று உயர்ந்து விட்டது. இதே போன்று, எவர்சில்வர் பாத்திரங்களின் விலையும் உயர்ந்து விட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை, கூலி உயர்வு உள்ளிட்டவற்றால் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|