பதிவு செய்த நாள்
02 ஆக2012
10:28
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.30 புள்ளிகள் குறைந்து 17200 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.70 புள்ளிகள் குறைந்து 5211.80 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் வளர்ச்சி மிக குறைவாகவே இருக்கும் என, எச்.எஸ்.பீ.சி., மதிப்பீடு வெளியானதையடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, தீர்வு காணும் வகையில், மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இருப்பினும், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, சென்ற ஜூலை மாதத்தில், சீனாவின் தயாரிப்பு துறை வளர்ச்சி சரிவடைந்துள்ளது என்ற மதிப்பீட்டால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.72 ஆக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|