பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:37
சேலம்: ஜவ்வரிசி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை, மூட்டைக்கு, 900 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கின் மீதுள்ள தோல் உறிக்கப்பட்டு, கிழங்கு இயந்திரத்தில் வைத்து அரைக்கப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் மாவில் இருந்து, ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி, டில்லி, மும்பை, கோல்கட்டா, புனே உட்பட, பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.கடந்த ஜூன் மாதம் வரை, ஜவ்வரிசி ஒரு மூட்டை (90 கிலோ), 2,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜூலை மாதம் முதல், ஒரு மூட்டைக்கு, 900 ரூபாய் வரை உயர்ந்து, 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடீர் விலை உயர்வு குறித்து, சேலத்தைச் சேர்ந்த ஜவ்வரிசி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:மரவள்ளிக்கிழங்கில் இருந்து, தயார் செய்யப்படும் ஜவ்வரிசியில், 95 சதவீதம் வெளிமாநிலங்களுக்கும், ஐந்து சதவீதம் தமிழகத்துக்கும், விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.இதனால், இதன் உற்பத்தி குறைந்து, விலையும் உயர்ந்து விட்டது. இது, மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|