பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:38
- நமது நிருபர் -கிருஷ்ணகிரியில் பகுதியில் ராஜஸ்தான் கம்பளி, போர்வை மற்றும் மெத்தை விரிப்புகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், ஜூன் மாதம் தென் மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். இதனால், மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தளி உள்பட மாவட்டம் முழுவதும் குளுமையான சீதோஷண நிலை நிலவுவது வழக்கம். கம்பளிஇதனால் பொதுமக்கள் இந்த மாதங்களில், அதிகளவில் குளிரை தாங்க கூடிய கம்பளி, போர்வை உள்ளிட்டவைகளை வாங்கி வருகின்றனர். இவர்களை மையமாக வைத்து ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரிகள், 10 ஆண்டுகளாக குறைந்த விலையில் போர்வை, கம்பளி மற்றும் மெத்தை விரிப்புகளை விற்பனை செய்ய, ஆண்டுதோறும் ஜூலை முதல் ஜனவரி வரையில், இங்கு முகாமிட்டு விற்பனை செய்வர்.இவர்கள் விற்பனை செய்யும் போர்வை, கம்பளி உள்ளிட்டவை, விலை குறைவாகவும், குளிரை தாங்கும் வகையிலும் உள்ளதால், பொதுமக்கள் இவற்றை ஆர்வமாக வாங்கி செல்வர். இந்தாண்டு பருவமழை பொய்து போனாலும், வழக்கம் போல் போர்வை விற்பனைக்காக கிருஷ்ணகிரி பகுதியில் ராஜஸ்தான் வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர்.இது குறித்து ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரி ராஜேஷ்மல்கான் கூறியது:கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இந்த சீசன்களின் குளிர் காலம் துவங்கும் என்பதால், இங்குள்ள மக்கள் அதிகளில் போர்வை, கம்பளி, மெத்தை விரிப்புகளை வாங்குவது வழக்கம். விற்பனையை குறி வைத்து ராஜஸ்தானில் இருந்து வியாபாரிகள், 10 பேர் கொண்ட எங்கள் குழுவினர் முகாமிட்டுள்ளோம்.மொத்தமாக லாரிகளில் கொண்டு வந்த சரக்குகளை, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையோரத்தில் வைத்து, இதே பகுதியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பஸ்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். மெத்தை விரிப்புகள்மீண்டும் இரவு கிருஷ்ணகிரிக்கு வந்து சரக்குகள் வைத்துள்ள இடத்தில் படுத்து கொள்வோம். போர்வை, கம்பளி மற்றும் மெத்தை விரிப்புகளுக்கான தயாரிப்புச் செலவு மற்றும் அதனை இங்கு கொண்டு வருவதற்கான செலவு அதிகரித்ததை அடுத்து, கடந்தாண்டை விட இந்தாண்டு இவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளது.போர்வை ஒன்று, 250 ரூபாய்க்கும், கம்பளி ஒன்று, 200 ரூபாய் முதல், 400 ரூபாய் வரையும், மெத்தை விரிப்பு, 500 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறோம். கடைகளில் விற்கும் விலையை விட குறைவாக உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவதால், இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|