சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் ... வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ...
வர்த்தகம் » ஜவுளி
கிருஷ்ணகிரியில் ராஜஸ்தான் போர்வைக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
23:38

- நமது நிருபர் -கிருஷ்ணகிரியில் பகுதியில் ராஜஸ்தான் கம்பளி, போர்வை மற்றும் மெத்தை விரிப்புகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும், ஜூன் மாதம் தென் மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். இதனால், மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தளி உள்பட மாவட்டம் முழுவதும் குளுமையான சீதோஷண நிலை நிலவுவது வழக்கம். கம்பளிஇதனால் பொதுமக்கள் இந்த மாதங்களில், அதிகளவில் குளிரை தாங்க கூடிய கம்பளி, போர்வை உள்ளிட்டவைகளை வாங்கி வருகின்றனர். இவர்களை மையமாக வைத்து ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரிகள், 10 ஆண்டுகளாக குறைந்த விலையில் போர்வை, கம்பளி மற்றும் மெத்தை விரிப்புகளை விற்பனை செய்ய, ஆண்டுதோறும் ஜூலை முதல் ஜனவரி வரையில், இங்கு முகாமிட்டு விற்பனை செய்வர்.இவர்கள் விற்பனை செய்யும் போர்வை, கம்பளி உள்ளிட்டவை, விலை குறைவாகவும், குளிரை தாங்கும் வகையிலும் உள்ளதால், பொதுமக்கள் இவற்றை ஆர்வமாக வாங்கி செல்வர். இந்தாண்டு பருவமழை பொய்து போனாலும், வழக்கம் போல் போர்வை விற்பனைக்காக கிருஷ்ணகிரி பகுதியில் ராஜஸ்தான் வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர்.இது குறித்து ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரி ராஜேஷ்மல்கான் கூறியது:கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இந்த சீசன்களின் குளிர் காலம் துவங்கும் என்பதால், இங்குள்ள மக்கள் அதிகளில் போர்வை, கம்பளி, மெத்தை விரிப்புகளை வாங்குவது வழக்கம். விற்பனையை குறி வைத்து ராஜஸ்தானில் இருந்து வியாபாரிகள், 10 பேர் கொண்ட எங்கள் குழுவினர் முகாமிட்டுள்ளோம்.மொத்தமாக லாரிகளில் கொண்டு வந்த சரக்குகளை, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையோரத்தில் வைத்து, இதே பகுதியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பஸ்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். மெத்தை விரிப்புகள்மீண்டும் இரவு கிருஷ்ணகிரிக்கு வந்து சரக்குகள் வைத்துள்ள இடத்தில் படுத்து கொள்வோம். போர்வை, கம்பளி மற்றும் மெத்தை விரிப்புகளுக்கான தயாரிப்புச் செலவு மற்றும் அதனை இங்கு கொண்டு வருவதற்கான செலவு அதிகரித்ததை அடுத்து, கடந்தாண்டை விட இந்தாண்டு இவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளது.போர்வை ஒன்று, 250 ரூபாய்க்கும், கம்பளி ஒன்று, 200 ரூபாய் முதல், 400 ரூபாய் வரையும், மெத்தை விரிப்பு, 500 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறோம். கடைகளில் விற்கும் விலையை விட குறைவாக உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவதால், இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)