பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:39
புதுடில்லி: பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் திட்டம், வரும் செப்டம்பரில் துவங்கும் என, மத்திய அரசின் பங்குவிலக்கல் துறை செயலர் ஹலீம்கான் தெரிவித்தார்.மத்திய அரசு, சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் 5-10 சதவீத பங்கு விற்பனை மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், பங்கு விற்பனை மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது. இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு, பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு பங்கு விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், முதன் முதலாக, பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் நிறுவனம், சென்ற மாதம், 10 சதவீத பங்கு விற்பனை மூலம் 2,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் ஊழியர்கள் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததாலும் பங்கு வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு துவங்கும் என, ஹலீம்கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், திட்டமிட்டபடி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 30, ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|