சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் ... பருத்தி பயிரிடப்படும் பரப்பு 10-15 சதவீதம் சரிவடையும் பருத்தி பயிரிடப்படும் பரப்பு 10-15 சதவீதம் சரிவடையும் ...
வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
23:39

புதுடில்லி: பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் திட்டம், வரும் செப்டம்பரில் துவங்கும் என, மத்திய அரசின் பங்குவிலக்கல் துறை செயலர் ஹலீம்கான் தெரிவித்தார்.மத்திய அரசு, சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் 5-10 சதவீத பங்கு விற்பனை மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது.ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், பங்கு விற்பனை மூலம் 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது. இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு, பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு பங்கு விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், முதன் முதலாக, பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் நிறுவனம், சென்ற மாதம், 10 சதவீத பங்கு விற்பனை மூலம் 2,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் ஊழியர்கள் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததாலும் பங்கு வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு துவங்கும் என, ஹலீம்கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், திட்டமிட்டபடி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 30, ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)