பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:39
புதுடில்லி: பெடரல் பேங்க், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 190 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட (146 கோடி ரூபாய்), 30.23 சதவீதம் அதிகமாகும்.ஜூன் மாதம் வரையிலுமாக, இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 88,601 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.28 சதவீதம் வளர்ச்சியாகும். மேலும், இவ்வங்கி திரட்டிய டெபாசிட் 17.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 50,558 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், செயல்பாட்டு செலவினம், 347 கோடி ரூபாயாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இவ்வங்கியின் தங்க நகை கடன் வர்த்தகம் 113 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன் 9.48 சதவீதம் அதிகரித்து, 4,199 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|