"செயில்' நிறுவனத்தின் உருக்கு  உற்பத்தி 4 சதவீதம் உயர்வு "செயில்' நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 4 சதவீதம் உயர்வு ... நடப்பாண்டில் உலகளவில் இதுவரை...அன்னிய நிறுவன முதலீடுகளில் இந்தியா முதலிடம் நடப்பாண்டில் உலகளவில் இதுவரை...அன்னிய நிறுவன முதலீடுகளில் இந்தியா ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஏற்றுமதி உயர்வால் சீரகத்தின் விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
23:44

கொச்சி: சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டில், முன்பேர வர்த்தகம் மற்றும் நடப்பு சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளது.உள்நாட்டில், குஜராத் மாநிலத்தில் தான் சீரகம் அதிகம் விளைகிறது. அம்மாநிலத்தில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், பல விவசாயிகள், சீரகத்தை விற்பனை செய்யாமல் கையிருப்பு வைத்துள்ளனர். இதுவும், விலை உயர்விற்கு காரணம் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.ஏற்றுமதிஉலகளவில், சீரக உற்பத்தியில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகளில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், பல நாடுகள், இந்திய சீரகத்தை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இதனாலும், இதன் விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், சிரியா மற்றும் துருக்கியில், சீரகம் உற்பத்தி, முறையே 1,000 டன் மற்றும் 5,000 டன் என்றளவில் தான் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது, எதிர்பார்த்ததை விட, குறைவான உற்பத்தியாகும்.பாகிஸ்தான்பன்னாட்டு சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சீரகத்தின் விலை குறைவாக உள்ளது. மேலும், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், இந்திய சீரகம் வேண்டி ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளன.முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், என்.சி.டீ.இ.எக்ஸ்., சந்தையில் அக்டோபர் மாத வினியோகத்திற்கான ஒரு குவிண்டால், சீரகத்தின் விலை 17,555 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஒப்பந்த விலையை விட, அதிகமாகும்.உற்பத்திகுஜராத்தில், உன்ஜா நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் சீரகத்தின் விலை, 16,463 ரூபாயாக உள்ளது. இச்சந்தைக்கு நாள் ஒன்றுக்கு, 8,000 மூட்டைகள் வருவதாகவும், இதில், 7,000 மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.நடப்பு 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் சீரக உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை= 55 கிலோ) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் பருவத்தில் 29 லட்சம் மூட்டைகளாக இருந்தது.இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 2,500 டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 2,369 டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)