பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:44
கொச்சி: சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டில், முன்பேர வர்த்தகம் மற்றும் நடப்பு சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளது.உள்நாட்டில், குஜராத் மாநிலத்தில் தான் சீரகம் அதிகம் விளைகிறது. அம்மாநிலத்தில், போதிய அளவிற்கு மழை இல்லாததால், பல விவசாயிகள், சீரகத்தை விற்பனை செய்யாமல் கையிருப்பு வைத்துள்ளனர். இதுவும், விலை உயர்விற்கு காரணம் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.ஏற்றுமதிஉலகளவில், சீரக உற்பத்தியில், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்நாடுகளில், இதன் உற்பத்தி குறைந்துள்ளதால், பல நாடுகள், இந்திய சீரகத்தை இறக்குமதி செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இதனாலும், இதன் விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், சிரியா மற்றும் துருக்கியில், சீரகம் உற்பத்தி, முறையே 1,000 டன் மற்றும் 5,000 டன் என்றளவில் தான் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது, எதிர்பார்த்ததை விட, குறைவான உற்பத்தியாகும்.பாகிஸ்தான்பன்னாட்டு சந்தைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சீரகத்தின் விலை குறைவாக உள்ளது. மேலும், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், இந்திய சீரகம் வேண்டி ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளன.முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், என்.சி.டீ.இ.எக்ஸ்., சந்தையில் அக்டோபர் மாத வினியோகத்திற்கான ஒரு குவிண்டால், சீரகத்தின் விலை 17,555 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஒப்பந்த விலையை விட, அதிகமாகும்.உற்பத்திகுஜராத்தில், உன்ஜா நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் சீரகத்தின் விலை, 16,463 ரூபாயாக உள்ளது. இச்சந்தைக்கு நாள் ஒன்றுக்கு, 8,000 மூட்டைகள் வருவதாகவும், இதில், 7,000 மூட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.நடப்பு 2011-12ம் பருவத்தில், உள்நாட்டில் சீரக உற்பத்தி, 40 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை= 55 கிலோ) இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010-11ம் பருவத்தில் 29 லட்சம் மூட்டைகளாக இருந்தது.இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், சென்ற ஏப்ரல் மாதத்தில், 2,500 டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 2,369 டன்னாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|