அசத்தும் கார் நிறுவனங்களின் சொந்த நிதி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் வங்கிகள் திணறல்அசத்தும் கார் நிறுவனங்களின் சொந்த நிதி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ... ... அன்னிய சுற்றுலா பயணிகள்வருகை 5.25 லட்சமாக உயர்வு அன்னிய சுற்றுலா பயணிகள்வருகை 5.25 லட்சமாக உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் மதிப்பு சரிவே பணவீக்கத்திற்கு காரணம்: சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2012
00:03

புதுடில்லி:விலைவாசியை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பார்லிமென்டில் தெரிவித்தார்.
அன்னிய செலவாணி: அவர் மேலும் கூறியதாவது:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இறக்கு மதி செலவு உயர்ந்துள்ளது. இந்த செலவினம், நுகர்வோர் தலையில் சுமத்தப்படுவதால், பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் 7-7.5 சதவீதமாக உள்ளது. உள்நாட்டு அன்னி யச் செலாவணி சந்தையில், டாலர் அளிப்பிற்கும், தேவைக்கும் உள்ள இடைவெளியால், ரூபாயின் வெளி மதிப்பு குறைகிறது.
வர்த்தக பற்றாகுறை:இத்தகைய போக்கிற்கு, நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பே காரணம். மேலும், ஐரோப்பிய நெருக்கடியின் தீவிரத்தாலும், சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு உயர்வினாலும் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியால், நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கிறது என்றாலும், இறக்குமதி செலவினம் அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை உயர வழிவகுத்து விடுகிறது.
தற்போதைய சூழலில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கும் அம்சங்களில் ஒன்றாக, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தேவை குறைந்துள்ளது. இதுவும் இந்திய நிறுவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
ரிசர்வ் வங்கி:மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஏற்றுமதியை ஊக்குவித்து, அன்னிய முதலீடுகளை குவிப்பதன் மூலம், ரூபாய் மதிப்பை நிலை நிறுத்தி, அன்னிய செலாவணி யின் புழக்கத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)