பதிவு செய்த நாள்
15 ஆக2012
09:36
சென்னை: "குரு புஷ்ய நட்சத்திர தினத்தையொட்டி, தபால் நிலையங்களில், 6.5 சதவீத தள்ளுபடி விலையில், நாளை, தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும்' என, தமிழக தபால் வட்டாரம் தெரிவித்து உள்ளது. இந்திய தபால் துறை, தமிழகத்தில், 283 தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்கிறது. அட்சய திருதியை உட்பட, பல்வேறு பண்டிகை நாட்களில், தபால் நிலையங்களில் பொதுமக்கள் வாங்கும் தங்க நாணயங்களுக்கு, சிறப்பு சலுகையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், "குரு புஷ்ய நட்சத்திர தினத்தை முன்னிட்டு, தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு, 6.5 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்; இச்சிறப்பு சலுகையை, குரு புஷ்ய என்றழைக்கப்படும், பூச நட்சத்திரமும், வியாழக்கிழமையும் கூடிய நாளில் மட்டுமே (நாளை), பொதுமக்கள் பெற முடியும்' என, தமிழக தபால் வட்டாரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|