6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை ... துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு ரூ.4,794 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
02:19

மும்பை:நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது என,"செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை:மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 17,544 கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 12,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த ஜூலை மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகளில், 10,273 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.
நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து, 143 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. இதே காலத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 321 புள்ளிகள் அல்லது 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடன் பத்திரங்கள்:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், பங்கு சந்தைகளில், 57,060 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில், 24,109 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.மதிப்பீட்டு காலத்தில், "செபி' அமைப்பிடம், பதிவு செய்து கொண்ட, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,767லிருந்து, 1,756 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,278லிருந்து, 6,362 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)