பதிவு செய்த நாள்
19 ஆக2012
00:02
பருவமழை குறைவால், நடப்பு கரீப் பருவத்தில் வெங்காயம் பயிரிடும் பரப்பளவு, சென்ற ஆண்டை விட 30 - 40 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பருவமழை தாமதம் காரணமாக, வெங்காயம் பயிரிடுவது, ஒரு மாதம் தள்ளிப் போய், ஜூலையில் தொடங்கியது.
மகாராஷ்டிரா:இதனால், அறுவடையும் தள்ளிப் போயுள்ளது. சந்தையில் புதிய வெங்காயத்தின் வரத்து, செப்டம்பரில் இருந்து அக்டோபர் வரை தள்ளிப் போகும் என்பதால், அதன் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிரா, 40 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கு, பருவமழை தாமதம் காரணமாக, வெங்காயம் பயிரிடும் பரப்பளவு 50 சதவீதம் குறையும் என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதே போன்று, வெங்காயம் அதிகம் விளையும் குஜராத்திலும், கடந்த ஆண்டு கரீப் பருவத்தை விட, நடப்பாண்டு கரீப் பருவத்தில் இதுவரை 10-15 சதவீத அளவிற்கே வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் போது மான அளவிற்கு பருவமழை பெய்யும் பட்சத்தில், விதைப்பு பணிகள் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழகம்,கர்நாடகாவிலும், 25-40 சதவீத அளவிற்கே வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள் ளது.அதுபோன்று,தமிழகம் மற்றும் ஆந்திராவிலும்,போதிய மழையின்மையால்,வெங்காயம்பயிரிடும் பரப் பளவு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.
அதே சமயம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில், மாற்று விதைப்பு தொழில் நுட்பம் பின்பற்றப்படுவதால், இவ்வகையிலான வெங்காய உற்பத்தியில் பாதிப்பு இருக்காது என்று தெரிகிறது. சந்தையில் வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து, அதன் விலை உயர்ந்து வருகிறது. தற்போது, பல்வேறு சந்தைகளில், பல வகையான வெங்காயத்தின் விலை, குவிண்டாலுக்கு 3,300 - 4,000 ரூபாய் வரை உள்ளது.
சென்னை:சென்ற ஜூன் மாத நிலவரப்படி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை 12-14 ரூபாயாக இருந்தது. இது, தற்போது அதிகபட்சமாக 17 ரூபாயாக உயர்ந்துள்ளது.
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|