பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:41
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சேவைகள் துறையில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 74 கோடி டாலராக (4,097 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 18 சதவீதம் குறைவாகும்.சர்வதேச பொருளாதார மந்த நிலை, பொது வரி எதிர் தவிர்ப்பு சட்ட விதிமுறைகளிள் (ஜி.ஏ.ஏ.ஆர்.) தெளிவற்ற நிலை போன்ற காரணங்களால், அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. மேலும், சென்ற 2011-12ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த மே மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 132 கோடி டாலராக (7,260 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், 466 கோடி டாலர் (25,630 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது.சென்ற ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில், மருந்து துறையில், 40 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உலோகம் (31 கோடி டாலர்), கட்டுமானம் (18 கோடி டாலர்), குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட் (13 கோடி டாலர்) ஆகிய துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், மொரீஷியஸ், 112 கோடி டாலர் மதிப்பிற்கு, இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இது தவிர, நெதர்லாந்து (41 கோடி டாலர்), இங்கிலாந்து (38 கோடி டாலர்) ஆகிய நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|