இந்திய மருந்து சந்தை 15.6 சதவீதம் வளர்ச்சி இந்திய மருந்து சந்தை 15.6 சதவீதம் வளர்ச்சி ... தேனி மாவட்டத்தில்... ஐந்து கோடி தேங்காய்கள் தேக்கம் தேனி மாவட்டத்தில்... ஐந்து கோடி தேங்காய்கள் தேக்கம் ...
பதுக்கலால் தமிழகத்தில் ரசாயன உரங்கள் விலை கடும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2012
23:45

- நமது நிருபர் -ரசாயன உரங்களின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தனியார் கடைகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு வியாபாரிகள் உரத்தை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.தழைச்சத்துநெல், மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு, டீ.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். பயிர்கள் செழித்து வளர, தழைச் சத்துக்காக யூரியா உரமும், மணிச் சத்துக்கு, பொட்டாஷ் உரத்தையும், பயன்படுத்துகின்றனர்.டீ.ஏ.பி., காம்ப்ளக்ஸ், யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை, அதிகளவில் விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு, கூட்டுறவு சங்கத்தின் மூலம் மானிய விலையில், யூரியா உரங்களை வழங்கி வருகிறது.இந்நிலையில், டீ.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள், விலை உயர்ந்துள்ளதோடு, தனியார் உரக் கடைகளில், அத்தியாவசிய உரங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்று வருவதாகவும், விலை பட்டியல் விவரங்களை, கடையில் வைப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.கூட்டுறவு சங்கம்இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:கூட்டுறவு சங்கத்தில், 50 கிலோ யூரியா உர மூட்டை, 266 ரூபாயும், பொட்டாஷ் உரம், 740 ரூபாயும், டீ.ஏ.பி., உரம், 890 ரூபாயும், 20:20 காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் 10:26 கலப்பு உரம், 700 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன.தனியார் கடைகளில், யூரியா மூட்டைக்கு, 300 ரூபாய் வரை அதிகரித்தும், பொட்டாஷ், 800 ரூபாய், டீ.ஏ.பி., 1,200 ரூபாய், காம்ப்ளக்ஸ் மற்றும் கலப்பு உரம், 1,000 ரூபாய் என, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. டீ.ஏ.பி., உரம் விலை, 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.கூட்டுறவு சங்கங்களில் விலை குறைவாக இருந்தாலும், அங்கு போதுமான உரம் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம், விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. தனியார் கடைகளில், கூடுதல் விலைக்கு, உரம் விற்பனை செய்வதால், விலை பட்டியல் வைப்பதில்லை.பருவ மழை துவங்கியதும், நடவுப் பணி துவங்கும் என்பதால், உரங்களை குடோன்களில், அதிகளவில் பதுக்கி வைத்துள்ளனர். உரத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயர்த்தி வருகின்றனர். வேளாண்துறை அதிகாரிகளிடம், புகார் செய்தாலும், உர விலை மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இறக்குமதிகூட்டுறவு சங்க உரம் விற்பனை பிரிவு மற்றும் வேளாண் அலுவலர்களிடம் கேட்டபோது, "ரசாயன உரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களுக்கும், உரங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கூட்டுறவு சங்கத்தில், உரம் விலை உயர்த்தப்படவில்லை; தனியார் கடைகளில், உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கினாலோ, கடும் நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)