பதிவு செய்த நாள்
25 ஆக2012
00:03
கோல்கட்டா:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பெயின்ட் துறையின் வளர்ச்சி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், கணிசமான அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பெயின்ட் துறையின் சந்தை மதிப்பு, 29 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.
உள்நாட்டில், குடியிருப்புகள், வர்த்தகம் மற்றும் சில்லரை ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக, அலங்கார பெயின்ட் வகைகளுக்கான தேவை, உயர்ந்து வருகிறது. அதே சமயம், பணவீக்கம் அதிகரிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, வட்டிச் செலவினம், கட்டுமான செலவு உயர்வு போன்ற காரணங்களால், பெயின்ட் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், பெயின்ட் துறையின் வளர்ச்சி முறையே, 12 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகவும், 22 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|