சிமென்ட், மணல், கம்பி விலை உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்சிமென்ட், மணல், கம்பி விலை உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம் ... மஞ்சள் விலை குவிண்டால் ரூ.9,000 ஆக நிர்ணயம் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.9,000 ஆக நிர்ணயம் ...
கல்வி கடன் வழங்குவதில் தமிழக வங்கிகள் முன்னணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
09:38

புதுடில்லி:கல்விக் கடன் வழங்குவதில், நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் தான், முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் தான், அதிக அளவில் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ஏழை மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, தகுதியான மாணவர்களுக்கு, பொதுத் துறை வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
50 சதவீதம்:
இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிகள் மூல மாக, 49 ஆயிரம் கோடி ரூபாய், கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள வங்கிகள் மட்டும், ஒட்டு மொத்த கடனில், 50 சதவீதத்தை வழங்கியுள்ளன.அதிலும், தமிழகத்தில் மட்டும், 11 ஆயிரத்து 625 கோடி ரூபாய், கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, கேரளாவில், 6,180 கோடியும், ஆந்திராவில் 5,215 கோடியும், கர்நாடகாவில் 3, 479 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.இந்த நான்கு மாநிலங்களில் இருந்து மட்டும், 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு, கடன் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூவில், நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக, கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உரிமையுண்டு:
மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடந்த வாரம், "கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, போதிய காரணங்கள் இன்றி, நிராகரிக்கக் கூடாது. தகுந்த காரணங்களுடன், கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, கடன் பெறுவதற்கான உரிமை உள்ளது' எனக் கூறியிருந்தார்.வங்கிகள் கடன் வழங்கும்போது குறிப்பிட்ட அதிகாரி, மாணவனின் விண்ணப்பத்தை ஏற்காத பட்சத்தில் உயர் அதிகாரி ஒப்புதல் பெற்று வழங்க முன்வரவேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட காலத்திற்குப் பின், கடனை திரும்ப செலுத்தாவிட்டால், பிரச்னை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு கடன் உதவி பெறும் மாணவர்களுக்கான நடைமுறை வரம்புகள் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் வகையில், புதிய அறிக்கையை வங்கித்துறை வெளியிடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)