உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி ... ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பருப்பு, சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
23:42

புதுடில்லி: பருவமழை குறைவால், நடப்பு கரீப் பருவத்தில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு மிகவும் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டில், இவைகளின் இறக்குமதி மிகவும் அதிகரிக்கும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.பற்றாக்குறைமதிப்பீட்டு பருவத்தில், மழை பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 88.30 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே பருவத்தில், 99.70 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று, எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் 1.70 கோடி ஹெக்டேரில் இருந்து, 1.64 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பற்றாக்குறை, இறக்குமதி வாயிலாக ஈடு செய்யப்படுகிறது.நம்நாடு, கடந்த மூன்றாண்டுகளாக, சராசரியாக, 25-35 லட்சம் டன் பருப்பு வகைகளையும், 80-90 லட்சம் டன் சமையல் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.இந்தியா, பருப்பு வகைகளை, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்தும், சமையல் எண்ணெயை இந்தோனேஷியா, மலேசியா, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.சாகுபடி பரப்பளவுநடப்பாண்டில் இதுவரையிலுமாக, நாட்டின் பருவமழை பற்றாக்குறை 14 சதவீதம் என்றளவில் உள்ளது. இதனால், பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து, பல்வேறு வேளாண் பொருட்களின் விலை அதிகரித்துஉள்ளது.கடந்த ஆண்டில், நம்நாட்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி 1.72 கோடி டன்னாகவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 3 கோடி டன்னாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)