பதிவு செய்த நாள்
27 ஆக2012
23:42
புதுடில்லி: பருவமழை குறைவால், நடப்பு கரீப் பருவத்தில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு மிகவும் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டில், இவைகளின் இறக்குமதி மிகவும் அதிகரிக்கும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.பற்றாக்குறைமதிப்பீட்டு பருவத்தில், மழை பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 88.30 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே பருவத்தில், 99.70 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று, எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் 1.70 கோடி ஹெக்டேரில் இருந்து, 1.64 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பற்றாக்குறை, இறக்குமதி வாயிலாக ஈடு செய்யப்படுகிறது.நம்நாடு, கடந்த மூன்றாண்டுகளாக, சராசரியாக, 25-35 லட்சம் டன் பருப்பு வகைகளையும், 80-90 லட்சம் டன் சமையல் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளது என, அமைச்சர் மேலும் கூறினார்.இந்தியா, பருப்பு வகைகளை, மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்தும், சமையல் எண்ணெயை இந்தோனேஷியா, மலேசியா, அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.சாகுபடி பரப்பளவுநடப்பாண்டில் இதுவரையிலுமாக, நாட்டின் பருவமழை பற்றாக்குறை 14 சதவீதம் என்றளவில் உள்ளது. இதனால், பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து, பல்வேறு வேளாண் பொருட்களின் விலை அதிகரித்துஉள்ளது.கடந்த ஆண்டில், நம்நாட்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி 1.72 கோடி டன்னாகவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 3 கோடி டன்னாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|