பதிவு செய்த நாள்
30 ஆக2012
00:38
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையன்றும் சரிவுடன் முடிவடைந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி அறிக்கை குறித்த எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்த மாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், நுகர் பொருட்கள், ஆரோக்ய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 140.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,490.81 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,653.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,471.13புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 46.80 புள்ளிகள் குறைந்து, 5,287.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,345.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,282.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|