நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...பால் பவுடர் பயன்பாடு 88,000 டன்நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...பால் பவுடர் பயன்பாடு 88,000 டன் ... சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் பொதிகளாக அதிகரிக்கும் சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 141 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
00:38

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையன்றும் சரிவுடன் முடிவடைந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.
இந்நிலையில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி அறிக்கை குறித்த எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்த மாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.இருப்பினும், நுகர் பொருட்கள், ஆரோக்ய பராமரிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 140.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,490.81 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,653.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,471.13புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 46.80 புள்ளிகள் குறைந்து, 5,287.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,345.50 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,282.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)