பதிவு செய்த நாள்
07 செப்2012
01:13
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 1.20 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 2.91 லட்சம் டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
உற்பத்தி:உள்நாட்டில், சோயா வித்துக்கள் விலை அதிகரித்ததால், எண்ணெய் உற்பத்தி குறைந்து, புண்ணாக்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சரிவடைய வழிவகுத்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 10,005 டன்னாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1.65 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.கணக்கீட்டு மாதங்களில், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதியும், 1.05 லட்சம் டன்னிலிருந்து, 68,401 டன்னாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த புண் ணாக்கு ஏற்றுமதி, 16 சதவீதம் குறைந்து, 14.58 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 16.94 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது.
ஈரான்:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், ஈரான் நாட்டிற்கு மேற் கொள்ளப்பட்ட புண்ணாக்கு ஏற்றுமதி, 4.56 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின்,இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 1.18 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி, 56 லட்சம் டன்னாக இருந்தது. இதில், ஈரானுக்கான ஏற்றுமதி மட்டும், 2.31 லட்சம் டன்னாகும் என, இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|