விமான பயண கட்டணம் உயர்வுவிமான பயண கட்டணம் உயர்வு ... பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புண்ணாக்கு ஏற்றுமதி 1.20 லட்சம் டன்னாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2012
01:13

புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 1.20 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 2.91 லட்சம் டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
உற்பத்தி:உள்நாட்டில், சோயா வித்துக்கள் விலை அதிகரித்ததால், எண்ணெய் உற்பத்தி குறைந்து, புண்ணாக்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சரிவடைய வழிவகுத்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 10,005 டன்னாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1.65 லட்சம் டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.கணக்கீட்டு மாதங்களில், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதியும், 1.05 லட்சம் டன்னிலிருந்து, 68,401 டன்னாக குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த புண் ணாக்கு ஏற்றுமதி, 16 சதவீதம் குறைந்து, 14.58 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 16.94 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது.
ஈரான்:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், ஈரான் நாட்டிற்கு மேற் கொள்ளப்பட்ட புண்ணாக்கு ஏற்றுமதி, 4.56 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின்,இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 1.18 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி, 56 லட்சம் டன்னாக இருந்தது. இதில், ஈரானுக்கான ஏற்றுமதி மட்டும், 2.31 லட்சம் டன்னாகும் என, இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)