பதிவு செய்த நாள்
10 செப்2012
00:10
கோல்கட்டா:நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் கச்சா சணல் உற்பத்தி, 95 லட்சம் பொதிகளாக (1 பொதி-180 கிலோ) குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, (108 லட்சம் பொதிகள்) 12 சதவீதம் குறைவாகும் என, இந்திய சணல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, நாடு தழுவிய அளவில், 9 லட்சம் ஹெக்டேரில், சணல் பயிரிடப்பட்டு வந்தது. நாட்டின் மொத்த சணல் உற்பத்தியில், மேற்கு வங்கத்தின் பங்களிப்பு, 67 சதவீதம் (6 லட்சம் ஹெக்டேர்) என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, அசாம், பீகார் மாநிலங்களில், சணல் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய அரசு, நடப்பு பருவத்தில், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக,"டி.டீ.-5' வகை கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு, 2,200 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இருந்தபோதிலும், விவசாயிகள் சணல் தவிர்த்து, மாற்றுப் பயிர் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடப்பு வேளாண் பருவத்தில், மழைப் பொழிவில் ஏற்பட்ட தாமதத்தால், பல மாநிலங்களில் வறட்சி காணப்படுகிறது. முந்தைய பருவத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு வேளாண் பருவத்தில், சணல் பயிரிடும் பரப்பளவு, 10 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|