பதிவு செய்த நாள்
10 செப்2012
00:17
மும்பை:சர்வதேச சந்தையில், இரும்புத் தாதுவின் விலை சரிவடைந்து வருவதால், அதன் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின், ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், 40 சதவீதம் சரிவடைந்து, 1.21 கோடி டன்னாக குறைந்துள்ளது. இதன் மதிப்பு, 5,236 கோடி ரூபாயாகும்.மத்திய அரசு, இரும்புத்தாது ஏற்றுமதி மீது, 30 சதவீத அளவிற்கு, தீர்வை விதிக்கிறது. இதனால், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளை விட, இந்திய இரும்புத் தாது விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவும், பல நாடுகள், இந்தியாவிலிருந்து, இரும்புத்தாது இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டுஉள்ளதாக தெரியவந்துள்ளது.
நடப்பு 2012ம் மார்ச் வரையிலான காலாண்டில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, கடந்த 2011ம் ஆண்டின் இதே காலாண்டை விட, 42 சதவீதம் குறைந்து, 5.74 கோடி டன்னாக சரிவடைந்திருந்தது. இந்நிலையில், சென்ற திங்கட்கிழமையன்று, சுப்ரீம் கோர்ட், கர்நாடக மாநிலத்தில், 14 சுரங்கங்களிலிருந்து, இரும்புத்தாது வெட்டி எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இனி வரும் மாதங்களில், இரும்புத்தாது உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|