பதிவு செய்த நாள்
13 செப்2012
12:44
வாஷிங்டன்: ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 40 சதவீதம், குறைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான், ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை விதித்துள்ளன. ஈரானிடமிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், குறைந்த அளவில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா, அனுமதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி விக்டோரியா நுலந்த் கூறியதாவது: சர்வதேச நாடுகள், ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு, காலாண்டுக்கு, 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள், ஈரானுக்கு, இதே போன்ற நெருக்கடியை தொடர்ந்து கொடுக்க வேண்டும். அமைதி பணிக்காக தான், அணுசக்தியை பயன்படுத்துவதாக ஈரான் கூறுகிறது. எனினும், அணுசக்தியை ராணுவத்துக்கு பயன்படுத்தவில்லை, என்பதை அந்நாடு, நிருபிக்க வேண்டும். இதை சர்வதேச நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனவே, ஈரான் இது தொடர்பாக, பேச்சு வார்த்தை நடத்த முன்வரும் என நம்புகிறோம். இவ்வாறு விக்டோரியா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|