பதிவு செய்த நாள்
13 செப்2012
23:50
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது. அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், நுகர் பொருட்கள், பொதுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.இருப்பினும்,ஆரோக்ய பராமரிப்பு,ரியல் எஸ்டேட்,மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.13 புள்ளிகள் அதிகரித்து, 18,021.16 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்ச மாக, 18,062.68 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 17,976.28 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், பீ.எச்.இ.எல்., இந்துஸ்தான் யூனி லிவர் உள்ளிட்ட 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும்,பார்தி ஏர்டெல், சிப்லா,டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி'4.35 புள்ளிகள் உயர்ந்து,5,435.35 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,447.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,421.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|