பதிவு செய்த நாள்
16 செப்2012
00:52
சென்னை:சென்னை கிண்டியில், ஐ.டி.சி., நிறுவனம், 'ஐ.டி.சி., கிராண்ட் சோழா' என்ற பெயரில், நட்சத்திர ஓட்டலை, 1,200 கோடி ரூபாய் திட்டச் செலவில் கட்டியுள்ளது. இதை, நேற்று, முதல்வர் ஜெயலலிதா, குத்து விளக்கு ஏற்றி, திறந்து வைத்தார்.இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் கூறியதாவது:இந்தியாவில், விருந்தோம்பல் துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
நாட்டின் மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலை, சென்னையில் கட்டியதை பெருமையாக கருதுகிறோம். 15 லட்சம் சதுர அடியில், 600 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில், கருத்தரங்கம், மாநாடு, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதில், தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்படும். திருவொற்றியூரில், விம்கோ நிறுவனம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நிறுவனத்தின் சார்பில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க உள்ளோம். இந்தியாவிற்கு வெளியே, முதல் முறையாக, இலங்கையில், ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|