உஷா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விருதுஉஷா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு விருது ... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் ... ...
கோழி தீவனம் விலை கிடு கிடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2012
01:04

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.
அவற்றில், நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. முட்டை உற்பத்திக்காக, 16 - 18 வார வயது உடைய கோழிகள் விடப்படுகின்றன. அந்தக் கோழிகள், தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வரை, முட்டையிடுகின்றன.முட்டை உற்பத்தி:ஒரு கோழி, சராசரியாக, 320 முட்டைகள் இடுகிறது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க, மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட மூலப் பொருட்கள் அடங்கிய தீவனங்கள், கோழிகளுக்கு வழங்கப்படுகின்றன.இவ்வகை தீவனங்களின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. மழைப்பொழிவு இல்லாததால், மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இது, கோழித் தீவனங்களின் விலையேற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.கடந்த, 2002ம் ஆண்டு, 75 கிலோ எடை கொண்ட கோழித் தீவன மூட்டையின் விலை, சராசரியாக 570 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 1,686 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில், கோழித் தீவனத்தின் விலை, இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என, முட்டை விலையை நிர்ணயம் செய்யும், நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.,) தெரிவித்துள்ளது.மானிய விலை:கோழித்தீவனத்தின் விலை ஏற்றத்தால், முட்டை விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்கும் விதமாக, மனிதர்களுக்கு உதவாத கோதுமையை மானிய விலையில் வழங்குமாறு, கோழிப்பண்ணையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)