ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும்ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும் ... ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர் ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அடுத்த மாதம் முதல் "ஹீரோ' மட்டும் தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
14:11

இந்தியாவில், இரு சக்கர வாகன விற்பனையில், 26 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் இருந்து வந்த நிறுவனம், "ஹீரோ ஹோண்டா'. இந்தியாவை சேர்ந்த முஜ்ஜால் குழுமம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த, ஹோண்டா நிறுவனமும் இணைந்து, "ஹீரோ ஹோண்டா' நிறுவனத்தை உருவாக்கின. எனினும், 2010ம் ஆண்டு, இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில், ஹோண்டா நிறுவனத்துக்கு இருந்த, 26 சதவீத பங்குகளை, ரூ.3,841 கோடி கொடுத்து, முஜ்ஜால் நிறுவனமே வாங்கியது. இதன் பிறகு, ஹீரோ ஹோண்டா நிறுவனம், "ஹீரோ மோட்டோ கார்ப்' என்ற புதிய பெயரில் செயல்பட துவங்கியது.

எனினும், இருசக்கர வாகனங்களில், "ஹீரோ ஹோண்டா' என்ற பெயர், 2014ம் ஆண்டு வரை நீடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த சூழ்நிலையில், "ஹீரோ மோட்டோ கார்ப்' நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், "இம்பல்ஸ்', "மேஸ்ட்ரோ', "இக்னிட்டர்' பெயர்களில், புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இந்த வாகனங்களில், "ஹீரோ' பெயர் மட்டுமே இடம் பெற்றது.

"ஹீரோ மோட்டோ கார்ப்' நிறுவனம் தற்போது, 18 மாடல்களில், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில், 15 மாடல் வாகனங்களில், ஹீரோ ஹோண்டா பெயர் தான் இருந்து வந்தது. தொடர்ச்சியாக, "ஹோண்டா' பெயர், வாகனங்களில் நீக்கப்பட்டு வந்தது. முதலில், இந்த மாற்றம், "ஸ்பெலண்டர்' பைக்குகளில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, "சிடி டான்' மற்றும் "சிடி' டீலக்ஸ்' ஆகிய பைக்குகளில் மட்டுமே, "ஹீரோ ஹோண்டா' பெயர் நீடிக்கிறது. இந்த மாத இறுதிக்குள், அந்த இரண்டு பைக்குகளிலும், "ஹோண்டா' பெயர் நீக்கப்பட்டு விடும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் ( சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) அனில் தியோ தெரிவித்தார். இதன் மூலம், அடுத்த மாதம் முதல், "ஹீரோ' பெயர் பொறிக்கப்பட்ட வாகனங்கள் தான் விற்பனைக்கு வரும். "ஹீரோ ஹோண்டா' பெயர் இனி இருக்காது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)