பதிவு செய்த நாள்
20 செப்2012
00:27
மும்பை:ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, முதலாவதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி வகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது.சென்ற திங்கட்கிழமையன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,), 0.25 சதவீதம் குறைத்து, 4.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதனால், வங்கிகளுக்கு கூடுதலாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு கிடைக்கும். இதையடுத்து, பல வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளன.
பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு, சி.ஆர்.ஆர். குறைப்பால், கூடுதலாக, 2,500 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இவ்வங்கி, அதன் அடிப்படை வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 9.75 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. புதிய வட்டி விகிதம், இன்று முதல் அமலுக்கு வருவதாக, இவ்வங்கியின் தலைவர் பிரதிப் சவுத்ரி தெரிவித்தார்.தற்போது, இவ்வங்கியின் அடிப்படை வட்டி விகிதம், 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|