பதிவு செய்த நாள்
26 செப்2012
00:16
புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின், அன்னிய நேரடி முதலீடு, 176 கோடி டாலராக (9,680 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, (110 கோடி டாலர்/ 6,050 கோடி ரூபாய்) 60 சதவீதம் அதிகமாகும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 618 கோடி டாலராக (33,990 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 1,460 கோடி டாலர் (80,300 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், சேவை, மருந்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் மின்சார துறைகளில் அதிகளவில் அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், மொரீஷியஸ் நாட்டிலிருந்து தான் அதிக அளவில், அன்னிய முதலீடு வந்துள்ளது. இதையடுத்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலர் என்ற அளவிலும், 2010-11ம் நிதியாண்டில், 2,583 கோடி டாலர் என்ற அளவிலும் இருந்தன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|