பதிவு செய்த நாள்
28 செப்2012
00:14
திருவனந்தபுரம்:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சரிவடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி குறைந்துள்ளது.உலக அளவில், முந்திரி பயன்பாட்டில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1.70 - 1.90 லட்சம் டன் முந்திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும், முந்திரியை பதப்படுத்தி, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும், இந்தியா விளங்குகிறது.
இருந்தபோதிலும், உள்நாட்டில் போதிய அளவிற்கு முந்திரி விளைச்சல் இல்லாததால், இந்தியா, அதன் மொத்த கச்சா முந்திரி தேவையில், 50 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, டாலர் அடிப்படையில் 18 சதவீதமும், அளவின் அடிப்படையில் 7 சதவீதமும் குறைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகளின் முந்திரி தேவை குறைந்துள்ளது. இத்துடன், தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிலும் முந்திரி பயன்பாடு, வீழ்ச்சி கண்டு உள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, 4,391 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.31 லட்சம் டன் முந்திரியை ஏற்றுமதி செய்தது. இது, முந்தைய நிதியாண்டை விட, அளவின் அடிப்படையில் 24.6 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|