வீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புவீட்டு வசதி கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ... நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும் நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்வதேச நிலவரங்களால் முந்திரி ஏற்றுமதி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
00:14

திருவனந்தபுரம்:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சரிவடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி குறைந்துள்ளது.உலக அளவில், முந்திரி பயன்பாட்டில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1.70 - 1.90 லட்சம் டன் முந்திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும், முந்திரியை பதப்படுத்தி, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும், இந்தியா விளங்குகிறது.
இருந்தபோதிலும், உள்நாட்டில் போதிய அளவிற்கு முந்திரி விளைச்சல் இல்லாததால், இந்தியா, அதன் மொத்த கச்சா முந்திரி தேவையில், 50 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, டாலர் அடிப்படையில் 18 சதவீதமும், அளவின் அடிப்படையில் 7 சதவீதமும் குறைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகளின் முந்திரி தேவை குறைந்துள்ளது. இத்துடன், தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிலும் முந்திரி பயன்பாடு, வீழ்ச்சி கண்டு உள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, 4,391 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.31 லட்சம் டன் முந்திரியை ஏற்றுமதி செய்தது. இது, முந்தைய நிதியாண்டை விட, அளவின் அடிப்படையில் 24.6 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)